புதன், 16 மார்ச், 2011

பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு கேடயம்

கிள்ளை : 

               சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையம் படகு சவாரி மூலம் கூடுதல் வருவாய் ஈட்டி மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றதை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டுள்ளது.

             தமிழக அரசு சுற்றுலாத் துறை மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் பெற்று தரும் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் படகு குழுமத்தை பாராட்டி ஆண்டு தோறும் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி ஊக்குவித்து வருகிறது. பிச்சாவரம் சுற்றுலா மையம் படகு சவாரி மூலம் 2008 - 2009ம் ஆண்டு 40 லட்சம் ரூபாயும், 2009 -10ம் ஆண்டில் 65 லட்சம் ரூபாயும், வருவாய் ஈட்டி மாநில அளவில் சிறப்பு பரிசு பெற்றது. தற்போது 2010 -11ம் ஆண்டில் 80 லட்சம் ரூபாய் வசூலித்து மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றது.

              தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பரிசு பெற்று வரும் பிச்சாவரம் படகு குழாமிற்கு சிறப்பு கேடயத்தை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை நிர்வாக இயக்குனர் மோகன்தாஸ் முன்னிலையில், சுற்றுலாத்துறை செயலர் ஜவகர், பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP