சனி, 10 டிசம்பர், 2011

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த 25 சிவனடியார்கள் தீப தரிசனம்

கடலூர் : 

          மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த 25 சிவனடியார்கள் கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று தீப தரிசனம் செய்தனர்.

           மொரீஷியஸ் நாட்டில் வாழும் தமிழ் வாழ் சிவனடியார்கள் 25 பேர் கடந்த வாரம் முதல் வரும் ஜனவரி 8ம் தேதி வரை 40 நாட்கள் தமிழகத்தில் உள்ள சிவன் கோவில்களில் தீப தரிசனம் செய்ய பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்று முன் தினம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப தரிசனம் செய்த அவர்கள், திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில், திருஆமத்தூர் அபிராமேஸ்வரர், திருவெண்ணைநல்லூர், திருவதிகை சிவன் கோவில்களில் தரிசனம் செய்த அவர்கள் நேற்று கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தீப தரிசனம் செய்தனர்.தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சென்றனர். ராமேஸ்வரம், கன்னியாகுமரியில் உள்ள சிவன் கோவில்களில் தரிசனம் செய்கின்றனர்.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP