சனி, 29 அக்டோபர், 2011

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பு

சிதம்பரம்:
 
             சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், கனடா, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். 

              அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வெள்ளிக்கிழமை நடராஜர் கோயிலுக்கு வந்தனர். அவர்கள் கோயில் கோபுரங்களில் உள்ள சிற்பங்கள், ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை மீது முதலாம் பராந்தக சோழனால் வேயப்பட்ட பொற்கூரை, ஆயிரங்கால் மண்டபம் ஆகியவற்றின் கலைநயத்தை ஆச்சர்யத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் கோயிலின் வரலாற்றை வழிகாட்டிகள் மூலம் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். 

              அமெரிக்கா, பிரான்ஸ் நாட்டிலிருந்து வரும் பெண்கள் பெரும்பானோர் தமிழக கலாசாரப்படி புடவை கட்டிக்கொண்டு கோயிலுக்கு வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற தரிசன திருவிழாவில் பெரும்பாலான வெளிநாட்டுப் பெண்கள் புடவை கட்டிக்கொண்டு வலம் வந்தது அனைவரையும் வியக்க வைத்தது.


0 கருத்துகள்:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP