பிச்சாவரம் படகு சவாரி மூலம்ரூ.40 ஆயிரம் கூடுதல் வருவாய்
கிள்ளை:
பிச்சாவரத்தில் படகு சவாரி மூலம், தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டு கூடுதலாக 40 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கிள்ளை அடுத்த பிச்சாவரத்தில் சுற்றுலாத் துறை மூலம் படகு சவாரிக்கு அனுமதிக்கப்பட்டு துடுப்பு படகுகளுடன், மோட்டார் படகுகள் இயக்கப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
குறிப்பாக கோடை மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்வதால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. தற்போது தீவாளியை முன்னிட்டு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறையாக இருந்ததால், நேற்று முன்தினம் சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர். இதனால், கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில் படகு சவாரி மூலம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 40 ஆயிரம் ரூபாய் கூடுதல் வருவாயாகும். நேற்று "ஜல்' புயல் காரணமாக படகு சவாரி நிறுத்தப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக