பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் புத்தாண்டு வருவாய் ரூ.1.26 லட்சம்
கிள்ளை :
சிதம்பரம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் புத்தாண்டை முன்னிட்டு, சனி மற்றும் ஞாயிறு இரு நாட்களில் படகு சவாரியின் மூலம், ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உள்ள சதுப்பு நிலக் காட்டில், பல அரிய வகை தாவரங்கள் உள்ளன. இதனால் வெளிநாடு, பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் பிச்சாவரத்திற்கு வந்து செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது 18 வகைக்கும் மேற்பட்ட மூலிகைகள் மற்றும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்ற 55 வகையான தாவரங்களை வனத்துறையினர் மற்றும் பசுமை நெறியியல் அமைப்பு சார்பில் பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பரில் பெய்த கனமழையால் சுற்றுலா மையம் வெறிச்சோடியது. தற்போது புத்தாண்டை முன்னிட்டு சனி,ஞாயிறு இருதினங்களில் படகு சவாரி மூலம், ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்தாண்டை விட 30 ஆயிரம் ரூபாய் கூடுதலாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக